தமிழகத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம், ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா செல்ல தடை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் மே 10 தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகள் வணிக வளாகங்கள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. காய்கறி, பழங்கள், மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை வண்டிகள் வாயிலாக நடைபெற அனுமதித்துள்ளது. மேலும் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC உடன் இணைப்பா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் உள்ள பிரபலமான கொடைக்கானல், நீலகிரி / ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். சுற்றுலா துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. சுற்றுலா தளங்களில் கடைகள் நடத்துவோர் மக்கள் வருகை இல்லாததால் நஷ்டமடைந்துள்ளனர். தேவையான காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று இந்த மாவட்டங்களுக்கு பயணம் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.