கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!!
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிவாரண நிதி – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் ஏற்பட்டு வந்த கொரோனா பாதிப்புகள் காரணமாக தமிழக அரசு மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நேற்று ஒரு நாளில் 33,059 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2,42,929 பேர் தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர். 364 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நேற்று 31,269 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1,60,463 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை, தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.