தமிழகத்தில் இன்று (நவ. 24) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் இன்று (நவ. 24) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று (நவ. 24) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று (நவ. 24) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து இன்று (நவ. 24) 13 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

ஆண்டுதோறும் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பின் சென்ற வாரம் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய நிலையில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும்மாவட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன் படி இன்று( நவ. 24) முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ( நவ. 24) அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனியாவிற்கும் ராதிகாவிற்கும் நடந்த வாக்குவாதம்.. எழிலிற்கு ஆறுதல் சொன்ன பாக்கியா – இன்றைய எபிசோட்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, மேலூர், மாவட்டங்களில் இன்று (நவ. 24) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!