வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் ரூ.5000க்கு மேல் விற்பனை – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த வாரம் குறைந்ததை அடுத்து வாரத்தில் முதல் நாளான இன்று ( டிச. 5) ரூ. 29 உயர்ந்து கிராம் ரூ.5,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரன் ரூ.232க்கு அதிகரித்து ரூ. ரூ.40 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த வாரம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5000யை நெருங்கிவிட்டது. அதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் விலையானது ரூ. 29 உயர்ந்து கிராம் ரூ.5,045க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற 8 ஆம் தேதி உருவாகிறது “மாண்டஸ் புயல்” – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் சவரனுக்கு 232 ரூபாய்அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெள்ளி விலையும் இன்றைய நிலவரப்படி அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து, ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.72,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.