தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்பு!!

0
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்பு!!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்பு!!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 2,279 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,279 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு வாரமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று தொடர்ந்து 3வது முறையாக ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,279 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மொத்த தொற்று எண்ணிக்கை 8,79,473 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,684 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,352 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு!!

இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,55,085 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 13,983 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!