தமிழகத்தில் இருந்து காசி செல்வது இனி ரொம்ப ஈஸி – மத்திய அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
தமிழ்நாடு மற்றும் காசி இடையே தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் ஸ்ரீ வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரயில் சேவை:
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக மத்திய அரசால் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. ரயில்வேயில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சென்னை ICF தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நாட்டின் 75 நகரங்கள் இணைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
முதல் கட்டமாக வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது தென்னிந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாரணாசி மற்றும் காசி இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ அஸ்வின் வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
RRB NTPC 2023: ரயில்வே துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு – 40,000+ காலிப்பணியிடங்கள்!!
Exams Daily Mobile App Download
கடந்த நவம்பர் 2ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு வரும் டிச.16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது காசி தமிழ் சங்கமத்தின் நினைவாக காசி மற்றும் தமிழ்நாடு இடையே காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.