தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி!!

0
தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் - உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி!!
தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் - உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி!!
தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி!!

கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தமிழகத்தில் போதிய அளவு இருப்பு இல்லாததால் தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோருவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மருத்துவ கழகம் சார்பில் இன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

தடுப்பூசி கொள்முதல்:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு இருப்பு இல்லாத காரணத்தால், தேவையான அளவு தடுப்பூசிகளை உலகளாவிய டெண்டர் மூலம் பெற்றுக்கொள்வதற்கு முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து மத்திய அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மே 27 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – பாரதியார் பல்கலை அறிவிப்பு!!

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குரிய தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படிப்படையில், தமிழகத்திற்கு 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்திற்கான ஒதுக்கப்படும் ஆக்சிஜன் அளவும் குறைவாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதுவரை ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் இன்னும் கூடுதல் ஆக்சிஜன்கள் தேவைப்படுகிறது. அதனால் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தி மையங்களை உடனடியாக அமைக்கவும், பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்’ என கூறப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி மருந்துகளை, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதன் படி தமிழகத்திற்கு தேவையான 5 கோடி கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை 3 மாதங்களுக்குள் வழங்கிட வேண்டும் எனவும், அந்த தடுப்பூசிகளை வழங்க ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!