தமிழகத்தில் கோவில் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை குறித்த வழக்கு – நீதிமன்றத்தின் கேள்வி!
தமிழகத்தில் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை விடுவது குறித்து வழக்கு தொடரப்பட்டது. அது குறித்து நீதிபதி கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
உள்ளூர் விடுமுறை:
ஆண்டுதோறும் மாசிமாதம் கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசி மகாமக திருவிழா நடைபெறும், இந்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி இந்த திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவிற்கு வெளி ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகைபுரிவார்கள். அதனால் இந்த ஆண்டு மாசி மகாமக திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
இந்த வழக்கு விசாரணையில் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மனுதாரர் தரப்பில் வெளியிட்ட விளக்கத்தில், திருச்செந்தூர் மற்றும் மதுரையில் விடுமுறை விடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்கள். அதன் பின் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.