தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அச்சம் – கொரோனா பரவல் எதிரொலி!!

0
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அச்சம் - கொரோனா பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அச்சம் - கொரோனா பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அச்சம் – கொரோனா பரவல் எதிரொலி!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் பள்ளிகளில் மாணவர்கள் வராமல் ஆசிரியர்கள் மட்டும் வருவதால் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த காரணத்தினால் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதால் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பொதுமக்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஆனால் மாணவர்கள் இல்லாவிட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதால், தினசரி வருகை பதிவு குறித்த அறிவிப்பு இயக்குநரகத்திற்கு அனுப்பப்படுகிறது. பல ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!