முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – தேதி அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர், மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கி அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான மாற்ற கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அம்மா மினி கிளினிக் பணி நிரந்தரம் கிடையாது – சென்னை ஆணையர் தகவல்!!
இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை ஹாரிங்டன் ரோடில் எம்சிசி மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் முன்னதாக முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்