தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் குறித்தான கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வு கூட்டம்:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் பேரில் இடமாறுதல் வழங்கப்படுகிறது. 2022 – 2023ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணியிட மாறுதல், பணிநிரவல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பொது மாறுதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு பற்றிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!
அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதாவது, இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் குறித்தான கலந்தாய்வு கல்வி மாவட்டத்திற்குள் அல்லது வருவாய் மாவட்டத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் குறித்தான கலந்தாய்வு திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் அல்லது ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் பெற வேண்டிய ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.