தமிழக டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் – வலுக்கும் போராட்டம்! அரசின் முடிவு என்ன?
தமிழக டாஸ்மாக் கடை ஊழியர்கள் சங்கத்தினர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் சங்கம்:
தமிழகத்தில் அரசு அனைத்து துறைகளின் மீதும் பல்வேறு புதிய நடவடிக்கை மற்றும் அறிவிப்புகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், டாஸ்மாக் கடை தொடர்பான பல புதிய அறிவிப்புகளும் அண்மையில் வெளியானது. தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டி தரும் அரசின் டாஸ்மாக் கடைகள் குறித்த பல்வேறு புகார்கள் எழுந்து வரும் போதிலும், அரசு முற்றிலும் டாஸ்மாக் கடைகளை மூடுவதில்லை. அதற்கான மாற்று ஏற்பாடுகளை மட்டுமே செய்து வருகிறது.
பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் – கல்வி நிபுணர்கள் அதிருப்தி!
சமீபத்தில் புதிதாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்ட 13ம் ஆண்டு பேரவைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. அதில், மாவட்ட செயலாளர் வீரையன், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனப் பொது செயலர் திருச்செல்வம், மாவட்ட செயலர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜூலு மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் என்றும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், விற்பனையின் அடிப்படையில் சுழற்சி முறை பணியிட மாறுதல் மற்றும் வெளிப்படையான பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் அதிகம் விற்பனை இருக்கும் கடைகளில் அதிக அளவில் ஊழியர்களின் எண்ணிக்கையும், குறைவான விற்பனை உள்ள கடைகளில் குறைவான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். கூடுதலாக நீண்டகாலமாக பணி மறுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு உடனடியாக கடை பணி வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.