தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அரசு ஆலோசனை!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அரசு, தனியார் போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மே 6 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து கடைகளும் திறக்க தடை விதிப்பதாகவும், அத்தியாவசிய தேவை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் – இன்று முதல் தொடக்கம்!!
ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா அதிகமாக பரவி வருவதால் டாஸ்மாக் கடைகளில் நேர குறைப்பு அமல்படுத்தப்பட்டு வழக்கமாக இல்லாமல் ஒரு மணி நேரம் முன்னதாக மூடப்படுகின்றன. இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளில் மேலும் டாஸ்மாக் கடைகளில் நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,780 பேர் பலி – 3,82,315 பேருக்கு கொரோனா!!
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது டாஸ்மாக் கடைகள் 40 நாட்கள் மூடப்பட்டன. அதனால் அரசுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனால் இந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூட வாய்ப்பில்லை. இருந்தாலும் கட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.