தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நீலகிரியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு பொது விடுமுறை காரணமாக மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதன்படி நேற்று முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போக்குவரத்து, கோவில்கள், உணவகங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் சில கட்டுப்பாடுகள், ஊரடங்கு காலங்களில் பகல் 12 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே மதுபான கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதத்தில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி, மே 1 ஆம் தேதி மே தினம், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
அதனால் இந்த விடுமுறை தினங்களை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபான சில்லறை விற்பனை, கிளப், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மது விற்பனை நடந்தால் அதை காவல் துறைக்கு தெரிவிக்கும் வகையில் நீலகிரி மாவட்ட மேலாளர் – 0423-2234211, ஏடிஎஸ்பி – 0423-2223802, உதவி ஆணையர் – 0423-2443693 ஆகியோரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகாரை அளிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.