தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு? அரசு ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை தடுப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்களின் தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த வருட மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தொழில் துறைகள் இயங்க தடை விதிக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்த நிலையில் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டன. நாட்கள் செல்ல செல்ல முழு வீச்சில் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி 8000க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலர் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 சாலைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!!
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஞாயிற்று கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் நோய் பரவல் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்