ஞாயிற்று கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் மூடல் – மாநகராட்சி ஆணையர் உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் சந்தைகள் நடைபெறும் பொழுது சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார் வந்துள்ளது. இதனால் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் சேராமல் இருக்க மாநகராட்சிக்கு கீழ் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!!
மேலும் இது மறு உத்தரவு வரும் வரை சேலம் மாநகராட்சி அங்காடிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீன் இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.