தமிழக மாணவர்களுக்கு பிரதமரின் ஆலோசனை கேட்க அறிய வாய்ப்பு – தொலைபேசி எண் அறிமுகம்!
உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, பிரதமர் மோடி மாணவ மாணவிகளுடன் “தேர்வை பற்றி விவாதிப்போம்” என்ற நிகழ்ச்சியில் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கலந்து கொள்ள இருக்கிறார்.
பிரதமர் நிகழ்ச்சி:
உலகளவில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வு குறித்த அச்சத்தை போக்க, மிகப்பெரிய தோ்வு திருவிழாவான “தேர்வை பற்றி விவாதிப்போம்” என்ற நிகழ்ச்சி வருகிற ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது காணொலி காட்சி மூலம் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் வண்ணம், தில்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள 150க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கூடுதல் நேர வகுப்புகள்! உயர்கல்வித்துறை உத்தரவு!
மேலும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்களது கருத்துகளை பிரதமா் மோடியிடம் குரல் பதிவு மூலம் அனுப்பும் வகையில் 1921 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி தோ்வு பயத்தைப்போக்கும் வகையில் ஆலோசனை வழங்குவார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டா், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவருடைய அனுபவங்கள், அறிவுரைகளை கேட்கலாம்.மேலும், innovateindia.mygov.in மற்றும் நமோ செயலி உள்ளிட்டவை மூலமாக தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அமைச்சா்கள் பலா் தமிழகம் வர இருக்கின்றனர். அவர்களும் தனிப்பட்ட முறையில் தோ்வு குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.