அஞ்சல் தேர்வு 2023 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? மதுரை எம்.பி தகவல்!!
இந்தியா முழுவதும் 40000 GDS காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக மதுரை எம்.பி சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அஞ்சல் தேர்வு:
நாடு முழுவதும் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களில் GDS பணியிடத்தில் காலியாக இருக்கும் 40000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த இதனை செய்தாலே போதும் – வெளியாகுமா அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பாட வாரியாக நிரப்ப வேண்டும். இதில் 6-வது பாடமாக ‘தெரிவு மொழி’ என்பது இடம்பெற்றுள்ளது. இதனை நிரப்பினால் மட்டுமே விண்ணப்ப பதிவு நிறைவடையும். இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் இந்த 6வது பாடம் இல்லை என்பதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்தனர். அதனால் இதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தும் , அஞ்சல் துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியும் உள்ளார்.
இவர் தனது கடிதத்தில், GDS பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதில் 6-வது பாட விவரம் கட்டாயமாக கேட்கப்படுவது நீக்கப்பட வேண்டும் என்றும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் அஞ்சல் தேர்வில் 6-வதாக உள்ள “தெரிவு மொழி” தமிழக மாணவர்களுக்கு விண்ணப்பிக்க தடையாக இருப்பது மாற்றப்படும் என்றும், விண்ணப்பிக்க கூடுதலாக 3 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படும் என அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் உறுதி அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி தகவல் தெரிவித்துள்ளார்.