தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!

1
தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் - பெற்றோர்கள் கோரிக்தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் - பெற்றோர்கள் கோரிக்கை!!கை!!
தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்னர் மாடல் தேர்வுகள் மாவட்ட அளவில் தேர்வு வினாக்கள் தயார் செய்து நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாடல் தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அதன் பின்னர் 10 மாதங்களுக்கு பின்னர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதுவரை ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக முதலில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதன்பின் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 2) விடுமுறை ரத்து – தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை!!

மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுவரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரையாண்டு தேர்வு அன்றே அனைத்து பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும். அதன் பின்னர் 3 திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் ஜனவரி மாதம் மட்டுமே திறக்கப்பட்டதால் தற்போது தான் பாடத்திட்டங்களை நடத்தி முடித்துள்ளனர்.

தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு – டிஜிபி அறிக்கை!!

இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “மாணவர்களின் உயர்கல்வி நிலை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்தே உள்ளது. பள்ளிகள் அளவில் மாடல் தேர்வு நடத்தினால் மாணவர்களின் கற்றல் நிலை அறிவது கடினம். எனவே மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைத்து வினாத்தாள்கள் தயார் செய்து மாடல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. எனவே கோவையிலும் அதனை நடைமுறைபடுத்த வேண்டும்”, என கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!