தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி – முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைகள் 4 மாதங்களுக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைகள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும், வார இறுதி நாள் ஊரடங்கும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதுவரை பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
93வது ஆஸ்கர் விருதுகள் 2021 அறிவிப்பு – முழு விபரம்!!
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை ஏற்று நடத்தினால் என என்று கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இது குறித்து சென்னையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிகலாம் என திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழக உணவகங்களில் பார்சல்கள் மட்டும் அனுமதி – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
இந்நிலையில் அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. அதனால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைகள் திறக்கப்பட வேண்டிய நிலைமை உள்ளது. இந்த ஆலைகளை மூடியதே தமிழக அரசு தான். ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைகள் திறந்து செயல்பட 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கலாம். இதனை கண்காணிக்க உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.