தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற நாட்களில் அதிக பண்டிகை வரவுள்ள காரணத்தினால் தெற்கு ரயில்வே சில வழித்தடங்களில் இயங்கி வரும் ரயில் சேவை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு ரயில்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சம் காரணமாக கடந்த மாதம் பல வழித்தடங்களில் இயங்கி வந்த சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் மீண்டும் இயங்கி வருகிறது.
மதுரை டூ துபாய் சர்வதேச விமான சேவை – ஜூலை 1 முதல் தொடக்கம்!
இந்நிலையில் வரும் மாதங்களில் அதிக அளவிலான பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக சில வழித்தடங்களில் இயங்கும் சிறப்பு ரயில் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொச்சுவேலி – இந்தூர் வாராந்திய சிறப்பு ரயில் (02646) நவம்பர் 2 வரை இயங்கும்.
இந்தூர்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (02645) வரும் நவம்பர் 5 வரையும், ஓகோ-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (0674) வரும் நவம்பர் 9 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருநெல்வேலி-பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (06070) வரும் நவம்பர் 7 வரையும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) வரும் நவம்பர் 11 வரையும், திருநெல்வேலி-தாதர் வாராந்திர சிறப்பு ரயில் (06072) வரும் நவம்பர் 3 வரையும் இயங்கும்.
தமிழகத்தில் ஜூன் 28க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள்- எந்தெந்த மாவட்டங்களுக்கு அனுமதி?
அதேபோல் மருமார்கத்தில் தாதர்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் வரும் நவம்பர் 4 வரையும், கோவை-நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் (06077) வரும் நவம்பர் 7 வரியும், நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) வரும் நவம்பர் 10 வரையும், கொச்சுவேலி-மைசூர் வாராந்திர சிறப்பு ரயில் (06316) வரும் நவம்பர் 7 வரையும், மைசூர்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (06315) வரும் நவம்பர் 8ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.