தமிழக பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 25) முழு வேலைநாள் – முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் நாளை (மார்ச் 25) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மேலும் 10ம் வகுப்பு மாணாவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நாளை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு காரணமாக நாளை (மார்ச் 25) சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC விவகாரம்: தேவையான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் – அமைச்சர் பதிலடி!
அதன் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செவ்வாய் கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி முழு வேளை நாளாக இயங்கும். தொடர்ந்து, மேல்நிலை பொதுத் தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download