தமிழக அரசு பள்ளிகளில் 13,300 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்? அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக காலியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 1 – 10 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த காலிப்பணியிடங்களால் மாணவர்களுக்கு கற்பித்தலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த கல்வியாண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்று அதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவு ஆகியவற்றால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
TCS நிறுவனத்தில் B.E / B.Tech பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் 6 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமாக உள்ளது.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்காலிகமாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 13,300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு கால தாமதமாகும் என்பதாலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.