பள்ளிகளில் மருத்துவ அலுவலர்களை நியமிக்க வேண்டும் – ஏபிவிபி மாணவர் அமைப்பு கோரிக்கை!!

0
பள்ளிகளில் மருத்துவ அலுவலர்களை நியமிக்க வேண்டும் - ஏபிவிபி மாணவர் அமைப்பு கோரிக்கை!!
பள்ளிகளில் மருத்துவ அலுவலர்களை நியமிக்க வேண்டும் - ஏபிவிபி மாணவர் அமைப்பு கோரிக்கை!!
பள்ளிகளில் மருத்துவ அலுவலர்களை நியமிக்க வேண்டும் – ஏபிவிபி மாணவர் அமைப்பு கோரிக்கை!!

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய மருத்துவ அலுவர்களை நியமிக்க ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பள்ளிகளில் மருத்துவ அலுவலர்கள்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க தமிழக அரசிடம் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் – மருத்துவ கல்வி இயக்ககம்!!

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் உருமாறிய கொரோனா தாக்கம் வேறு பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்துள்ளது. குறிப்பாக பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாணவர்களுக்கான சத்து மாத்திரை வழங்குதல், பள்ளிகளில் சமூக இடைவெளியினை கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் போன்றவை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இருந்த போதிலும் ஏபிவிபி (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில இணை செயலர் ரா.கோபி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தது மற்றும் பாடத்திட்டங்களில் 45% குறைப்பு போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை கண்காணிக்க சுகாதார அலுவலர் நியமிக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போதும் செல்லும்போதும் அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிக்க மருத்துவ அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்”, போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!