சீருடை இல்லாத காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை – மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம்!!
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு சீருடை அணிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி அறிவித்து சில நாட்கள் இடைவெளி உள்ளதால் புதிய சீருடை தயாரிக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா நோய் காரணமாக 10 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல் மற்றும் தொட்டியம் அரசு மேல் நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக அரசுப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட மாணவர் வருகை அதிகம் – கல்வி அலுவலர் அறிக்கை!!
நேற்று 10 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெருன்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். சில மாணவர்கள் வராதது குறித்து ஆட்சியர் கேள்வி எழுப்பினார். அப்போது சில மாணவர்கள் பொங்கல் விடுமுறை காரணமாக வெளி ஊர்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்து உடல் பருமன் காரணமாக பள்ளி சீருடைகள் சேராத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.
அஞ்சல்துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 1ஆம் தேதி நேர்முக தேர்வு!!
பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை குறைந்த கால இடைவெளியில் தமிழக அரசு வெளியிட்டதால் புதிய சீருடை எடுக்க போதிய நேரம் இல்லாததால் பள்ளிக்கு வர இயலவில்லை என தெரிவித்தனர். இதனை மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் வந்து தெரிவித்தனர் என்று கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்