தமிழக அரசுப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட மாணவர் வருகை அதிகம் – கல்வி அலுவலர் அறிக்கை!!

0
தமிழக அரசுப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட மாணவர் வருகை அதிகம் - கல்வி அலுவலர் அறிக்கை!!
தமிழக அரசுப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட மாணவர் வருகை அதிகம் - கல்வி அலுவலர் அறிக்கை!!
தமிழக அரசுப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட மாணவர் வருகை அதிகம் – கல்வி அலுவலர் அறிக்கை!!

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளிக்கு மாணவர்கள் அதிகம் வந்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் வருகை அதிகரிப்பு:

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 506 பள்ளிகள் உள்ளன. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் போன்றவை அடங்கும். பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். இதனால் தமிழகத்தில் 85% மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஜன.,30 வரை நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பள்ளிகளில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மாணவர்கள் விருப்பத்தின் படி பள்ளிக்கு வர வேண்டும் எனவும், மாணவர்களின் வருகை பதிவு கணக்கிட தேவை இல்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் தங்களது சுய விருப்பத்தின் படி பள்ளிக்கு வந்துள்ளனர்.

நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 506 பள்ளிகளில் திறக்கப்பட்டதில் 10-ஆம் வகுப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 79% மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் 52% மாணவர்களும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 51.50 சதவீத மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். இதே போல 12ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் 76.5 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 78 சதவீத மாணவர்களும், மெட்ரிக் பள்ளியில் 44 சதவீத மாணவர்களும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 40 சதவீத மாணவர்களும் வந்தனர்.

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – பெண் வாக்காளர்களே அதிகம்!!

சாதாரண நாட்களில் 80 முதல் 82 சதவீத வருகை பதிவு இருக்கும். இந்த கொரோனா காலத்தில் 71 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வந்திருப்பது பெருமைப்பட வேண்டியது, வருகிற நாட்களில் மீதமுள்ள மாணவர்களும் பள்ளிக்கு இயல்பாக வருகை தர வாய்ப்புள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!