தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி தாளாளர்கள் கோரிக்கை!!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளி தாளாளர்கள் கோரிக்கை!!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு - தனியார் பள்ளி தாளாளர்கள் கோரிக்கை!!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி தாளாளர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.  2020 மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை.  பல்வேறு ஆலோசனை கூட்டங்களுக்கு பின்னர் ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.  பின்னர் கொரோனா அதிகரித்ததன் விளைவாக மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

JEE மெயின் மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வும் மறுஉத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  மே 1ம் தேதி முதல் அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.  இதற்கிடையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.  ஊரடங்கு உத்தரவின் விளைவாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைன் வழி கல்வியில் பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அவர்களின் கற்றல் திறன் கேள்விக்குறியாகி உள்ளது.  மேலும் கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்கள் உரிய வசதிகள் இல்லாத காரணத்தால் டிஜிட்டல் முறை வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத நிலை உள்ளது.  நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

இதனால் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு குறைந்த அளவு மாணவர்களுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளிகளை திறக்க திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.  இது தொடர்பாக புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் அவர்கள் முதல் கையெழுத்தாக இந்த அனுமதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!