தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 11ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டில் ஆவது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.
பள்ளிகள் திறப்பு எதிர்பார்ப்பு:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. ஆன்லைன் வழி வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் சிலர் படிப்பை பாதியில் கைவிட்டு பணிக்கு செல்ல தொடங்கினர். இவ்வாறு இடைநின்றவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வருகை புரிய வைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!!
நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்றது. 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளே தற்போது தொடர்ந்து வருவதால் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை செலுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அடுத்த கல்வியாண்டில் ஆவது 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. எனவே இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்