தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!

1
தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய கல்வியாண்டில் ஆவது முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் விளைவாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. இதனால் வகுப்புகள் ஆன்லைன் முறையில் எடுக்கப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!!

பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் போதிய அளவு ஆர்வம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதி குறைந்த மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவதே மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதற்கான மதிப்பெண் கணக்கீடு விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

மேலும் 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் விரைவில் பிளஸ் 2 மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில் கொண்டு புதிய கல்வியாண்டு முதல் முழுவதுமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்கள் விடுமுறை – பட்டியல் வெளியீடு!!

தங்களது வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி நண்பர்கள் என எவரையும் பார்க்காமல் மாணவர்கள் உற்சாகமின்றி காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, தேவையான வசதிகளை ஏற்படுத்தி புதிய கல்வியாண்டு முதல் முழுநேர நேரடி வகுப்புகளை தொடங்கினால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!