தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு உள்ள நிலையில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் என பல்வேறு வழிமுறைகளில் பாடங்களை கற்று வந்தனர். கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் தேர்வு நடத்த முடியாத சூழல் நிலவியதால் மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இம்முறை பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி 19ல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியம் வழங்கல் – அரசாணை வெளியீடு!!
மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொத்தேர்வு நடத்துவதற்கும் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி 9ம் வகுப்பிற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் – கால அட்டவணை விரைவில் வெளியீடு!!
இதற்காக பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே பிப்ரவரியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
School open pannina pillaingaloda nilamai
Please cancel 11th public. We can’t get ready for public in just 3 months.
பாடங்கள் எப்படி நடத்தி அதை இந்த இரண்டு மாததத்திற்ககுள் எந்த வித இடைதேர்வு இல்லாமல் பொதுதேர்வை நடத்த முடியும் இதனால் மனதளவில்மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கபடமாட்டார்களா
வருடம் முழுவதும் நடத்திய பாடங்களுக்கு நம் மாணவர்களால் தேர்வு எழுத முடியாது இந்த இரண்டு மாதத்திற்குள் நடத்தும் இந்த படங்களுக்கு மாணவர்கள் எப்படி பொதுத்தேர்வை எழுத முடியும் மேலும் எந்த இடைத்தேர்வு ம் இல்லாமல் பொது தேர்வினை எழுத முடியுமா அரசும் கல்வியாளர்களும் இந்த பொதுத் தேர்வுக்கு வேறு ஏதேனும் மாற்று வழியினை செய்தால் மட்டும் தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்