தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், மக்கள் நலவாழ்வுத்துறை அறிவுறுத்தலின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்க தயார்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 8 மாதங்கள் கழித்து நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நாளை பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
40% மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 அரசு பணிகள் – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவனியில் காலிங்கராயன் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “மக்கள் நலவாழ்வுத்துறை அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் – அரசு நிறுவனம் அறிவிப்பு!!
மாணவர்கள் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வர வேண்டும். சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், தேர்தல் குறித்து அட்டவணை வெளியிட்டதும், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Already in Sivaganga private school taking the class and exam
Can they give an assurance that the children will not be affected by covid19.