தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் இறுதி முடிவு!!
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து மாநில அரசு சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்று கூறி நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!!
இந்நிலையில் தமிழகத்தில் 10 மாதங்களாக பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 22.3 சதவிகிதம் மாணவர்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலை மாற, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50% மாணவர்களுக்கு 2 பிரிவுகளாக வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு – வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்கள் படிப்பு எவ்வளவோ, முக்கியமோ அதே நேரத்தில் உடல்நிலையும் முக்கியம். எனவே பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார். மேலும் இது குறித்து தமிழக அரசு 8 முதல் 10 வாரங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த வழக்கினை மீண்டும் தொடரலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்