தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து விரைந்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் விளைவாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்பித்த நிலையில், அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்றலை தொடங்கியது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் ஆர்வம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – நிதிப்பற்றாக்குறை எதிரொலி!!

நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் அல்லது மொபைல்போன் பார்ப்பதால் மாணவர்களுக்கு கண் எரிச்சல், தலைவலி போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்கள் குவிந்தன. இதனால் ஆன்லைன் கல்விக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததால் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது. அதற்கான பல்வேறு கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன் முடிவில் கடந்த ஜனவரி 19 முதல் கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்புகளுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலால் 12ம் வகுப்பு தவிர பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

அதற்கடுத்து கொரோனா வைரஸின் 2வது அலை வேகமெடுக்கத் தொடங்கியது. தினசரி 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் 12ம் வகுப்பிறகும் நேரடி வகுப்புகள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் – தேடல் குழு தலைவர் நியமனம்!!

கடந்த கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முழுவதுமாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகமின்றி காணப்படுகின்றனர். இதனால் வருகின்ற கல்வியாண்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறந்து வகுப்புகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!