தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் , 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் வசதி இல்லாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஜனவரி 21 முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதால், ஜனவரி 6,7,8 ஆம் தேதிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 95% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டிய நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் ஜனவரி 19-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் – தேர்வர்கள் குழப்பம்!!
இதன்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர். பள்ளிகளில் அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்