தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு – TRB தலைவர் பதிலளிக்க உத்தரவு!!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட வயது வரம்பை நீக்கி புதிய வயது வரம்பை அறிமுகப்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் டிஆர்பி தலைவர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளுக்கு இதுவரை வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான வயது வரம்பை TRB வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிநியமனம் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவர் தொடந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளவை,”தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை கடந்த 11 ஆம் தேதி TRB வெளியிட்டது. அதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்தது.
தமிழக குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை – மாற்று வேலை நாள் அறிவிப்பு
ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் தொடர்ந்து தேர்வு எழுதி இறுதியில் கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி அனுபவம் இல்லாத காரணத்தால் மதிப்பெண் இழந்தேன். இந்நிலையில் தற்போது இந்த பணிகளுக்கும் புதிதாக வயது வரம்பு நிரநயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாதவர்களும் பணி நியமனம் வழங்கப்படுவார்கள். இதனால் மாணவர் சமுதாயம் பெரிதும் பாதிக்கப்படும்.
SSC MTS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – மார்ச் 21 ஆம் தேதி கடைசி நாள்!!
எனவே புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த வயது வரம்பு அறிவிப்பை மாற்றி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்”, இவ்வாறு அதில் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டது.