தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகம் முழுவதும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. பிற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்குமாறு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் முக்கிய ஆலோசனை!!
ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பணிகளை துவக்கி வைக்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன் முடிவில் பெறப்படும் தகவல்களை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார்.
ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது எனவும் 2 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்