தமிழகத்தில் 15 நாட்கள் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்னதாக பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் அது மே 5ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்ட உள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது. அதன் பின்னர் பொதுத்தேர்விற்கு தயாராவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்ப்பட்டு உள்ளது. திடீரென தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அதற்கு தயாராவது கடினம். மேலும் நீண்ட நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு குறைந்து படிப்பின் மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் புதிய தேதி அறிவிக்கப்பட்டு தேர்வுகள் தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்னதாக பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மே 7 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த 2 வார காலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் தேர்வுகளை எதிர்கொள்ளும் நோக்கில் மனவலிமையை அதிகரிக்க மாணவர்களுக்கு பயிற்சிகளை அளிக்கலாம். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.