தமிழகத்தில் இன்று (ஜூலை 7) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் கோடைகாலம் முடிந்து தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 7) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கடந்த மாதம் வரை வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் மக்கள் பெரும் அவதி அடைந்த நிலையில் சில வாரங்களாக வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. க மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகர் பகுதிகளிலும், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
தமிழகத்தில் ஜூலை 11ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் & அரசு அலுவலகங்கள் மூடல் – இதற்காக தான்?
இதனால் கோவையில் பல சாலைகளில் மழை நீர் பெருகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 7) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.