தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் நேற்று முதல் கனமழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து இருக்கிறது. அதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 போ் உதகைக்கு வந்துள்ளனர்
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில், மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – கல்வி இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகள்!
வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் கேரளா கர்நாடகா மாநிலங்களில் இன்னும் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.