தமிழகம் முழுவதும் மார்ச் 19 (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வரும் நிலையில் வருகிற மார்ச் 19ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை, அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியானது. இதனால் மாணவர்கள் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அளவில் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களை முழுவீச்சில் தேர்வுக்காக தயார் செய்து வருகின்றனர்.
TN MRB மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
இதற்கிடையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் பள்ளிகளுக்கு மாணவர் வருகை குறைவாக உள்ளதால் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரி வந்தனர். ஆனால் பொதுத்தேர்வின் காரணமாக இது தொடர்பாக பரிசீலிக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.
தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தற்போது வெளியான அறிவிப்பின் படி, வருகிற மார்ச் 19ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதுமட்டுமின்றி மார்ச் 20ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் வழக்கம் போல பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பெற்றோர் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.