தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்கள் – பிப்ரவரி 15 வரை கணக்கெடுப்பு பணி!!
கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாத நிலையில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் முடிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இடைநிற்றல் மாணவர்கள் கணக்கெடுப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் திறக்கவில்லை, பலர் வேலை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டு தொழில் தேடி பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் கல்வி கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
இதன் மூலமாக ஆண்டு தோறும் 500 முதல் 600 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இடைநிற்றல் மாணவர்களின் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. எமிஸ் எண் அடிப்படையில் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்லுகிறார்களா என தெரிந்து கொண்டு பள்ளிக்கு செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!
இந்த கணக்கெடுப்பு பணிகளை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளிகளில் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்