தமிழகத்தில் உள்ள 22 டி.இ.ஓ காலிப்பணியிடங்கள் – சட்டமன்ற தேர்தலுக்குள் நிரப்ப கோரிக்கை!!
தமிழகம் முழுவதும் உள்ள 124 கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
டி.இ.ஓ பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 124 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என நியமனம் செய்து அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தல், உரிமம் புதுப்பித்தல், நலத்திட்டங்களை பள்ளிக்கு கொண்டு வருதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தை ‘ஆத்மநிர்பர்தா’ – ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 22 டி.இ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணிகள் குறித்த செயல்களை பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா வெளியிட்ட அறிவிப்பின் படி, “தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றி வரும் சிலரின் பணிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.
தமிழில் சிறந்த நூலுக்கான ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை திட்டம் – பிப்ரவரி 28 கடைசி தேதி!!
இதனால் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவே இந்த இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு வாயிலாக நிரப்பப்படுவோர் 6 மாதங்கள் பயிற்சிக்கு பின் தான் பணி மேற்கொள்ள முடியும். அதுவரை பதவி உயர்வு வழங்காமல் இருந்தால் கல்விப்பணி தேக்கம் அடையும். சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால் அதற்குள் பதவி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்