தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – கல்வித்துறை அறிவிப்பு!!

3
தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்படும் என வெளிவந்த தகவல்களை தொடர்ந்து 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10,12 வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தேர்வுகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி தேவை என்பதற்காக தொடர்ந்து வகுப்புகள் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.

தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி,” தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு சரியான கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’, ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து வெளிவரும் தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் நம்ப வேண்டாம். 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவது மிகவும் அவசியம். எனவே பள்ளிகள் தொடர்ந்து வழக்கம் போல் செயல்பட்டு வரும்”, என்று தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!