9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழக அரசு அறிவிப்பு!!!
9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழக அரசு அறிவிப்பு!!!
9 ,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு மூலம் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தொடக்கம்!!

இந்நிலையில் 9, 10, 11 மற்றும் 12 என 4 வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வருவதால் கொரோனா பரவாமல் இருக்க அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு முதல்வரின் ஆணையின் படி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளன. அவை பின்வருமாறு,

  1. மாணவர்களுக்கு பெரிய வகுப்பறையாக இருப்பின் ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 மீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் என அமர வைக்க வேண்டும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஒரு வகுப்பறையில் 10 மாணவர்க்கு மட்டுமே அனுமதி!!

2. இவ்வாறு இடைவெளி விட்டு அமர ஏற்ற இடவசதி மற்றும் ஆசிரியர் வசதி உள்ள பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் பள்ளி முழு வேளையும் நடத்தலாம்.

3. சமூக இடைவெளி விட்டு அமர போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் உள்ள நூலகங்கள், கூட்ட அரங்கம் மற்றும் ஆய்வகங்களை பயன்படுத்தலாம்.

4. சமூக இடைவெளியுடன் அமர வைக்க இடம் உள்ள பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்றால் அவர்களை பெரிய வகுப்பறை, கூட்ட அரங்கில் அமர வைத்து வகுப்புகள் நடத்தலாம்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு – பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!

5. இந்த முறைகளை பயன்படுத்த முடியாத பள்ளிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செயல்படலாம்.

6. பள்ளிகளில் வகுப்புகள் இரண்டு பிரிவுகளாக செயல்படலாம். அவ்வாறு செயல்படும் போது காலை வகுப்புகள் முடிந்தவுடன் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மாலை வகுப்புகள் தொடங்க வேண்டும்.

7. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் போது அறிவுத்தப்பட்ட கைகழுவுதல், கிருமிநாசினி தெளித்தல், உடல் வெப்பநிலை சோதித்தால், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதல்வர் வெளியிட்ட அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!