தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் பள்ளிகளில் அதிகமாக பரவி வருவதால் அரசு தெரிவித்த கொரோனா கட்டுப்பாடு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மார்ச் மாதம் முதல் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன இந்நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன்பின்னர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகளில் அரசு தெரிவித்த கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்காமல் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 21 கடைசி நாள்!!
இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா நோய் பரவல் அதிகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடந்த 1 வாரமாக கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா மாணவர்களுக்கு பரவி விட கூடாது என்பதற்காக நேற்று தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் – தேர்வு அட்டவணை வெளியீடு!!
அந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
அந்த உத்தரவுகளில் அவர் கூறியுள்ளவை, கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும். அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுகின்றன என கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்றவாற்றை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளில் சளி, காய்ச்சல்,இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.