தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை – 3 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு பதில்!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு பின்னர் பதிலளித்துள்ளது.
கணினி அறிவியல் பாடங்கள்:
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சியின் போது கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு தனி பாடமாக அறிவித்தது. ஆனால் ஆட்சி மாறுதல் காரணமாக இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகளாக அரசு பள்ளியில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒரு கணினி ஆசிரியராவது நியமிக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை போன்றவற்றிற்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு இந்த மனு குறித்து தமிழக அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என வேண்டுகோள் மட்டுமே வைத்தது தவிர உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
இதனால் வேலை இல்லாமல் இருக்கும் 6000 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தவிர பணி நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகள் கோரிக்கைக்கு பின்னர் மத்திய அரசு சங்க செயலாளருக்கு ஒரு பதில் மனு அனுப்பியது, அதில் கணினி ஆசிரியர்கள் பிரச்னைகளை ஆராயவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஒரு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக வங்கிகளில் வேலை நிறுத்த போராட்டம் – மார்ச் 15 & 16 தேதிகளில் அறிவிப்பு!!
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தொடரில் அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி பாடத்தை கொண்டு வரப்படும் என தெரிவித்தது. அதில் தனியாக ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படாமல், அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் வைத்து அந்த பாடங்களை நடத்த இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி – தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!!
இந்நிலையில் கணினி அறிவியல் ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் மத்திய அரசு தகவல் தொழில் நுட்பத்திற்காக வழங்கப்படும் நிதியை வீணாக்காமல் அரசு பள்ளிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும் அந்த பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என்பதே எங்களது பல நாள் கோரிக்கையாக உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.