தமிழகத்தில் கணினி பயிற்றுனர் தேர்வு முறைகேடுகள் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் உள்ளதாக தொடங்கப்பட்ட வழக்கில் இந்த முறைகேடுகள் குறித்து இரு நபர் விசாரணை குழுவிடம் மனு செய்து குறைகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கணினி பயிற்றுனர் தேர்வு முறைகேடுகள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் (முதுகலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிட்டது. அதன்படி நடந்து முடிந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கணினி பயிற்றுனர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே அந்த தேர்வுகளை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் சில கீ விடைகள் தவறாக உள்ளதாகவும், அதற்கான மதிப்பெண்களை தங்களுக்கு வழங்கி தேர்வு பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கை போல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய ஆலோசனை!!
அந்த வழக்குகளை கவனிக்க 2 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு சென்னை நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலை டி.பி.ஐ., வளாகம் ஈ.வி.கே.சம்பத் மாளிகையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள்/தவறுகள், வினாத்தாள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டதன் செல்லுபடி தன்மை, ‘கீ’ பதில்களில் தவறுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த தவறுகளை அந்த குழு மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கும்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.