தமிழகத்தில் இன்று (நவம்பர் 14) விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் விவரம் – மாணவர்கள் கவனத்திற்கு..!
தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 14) மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று ( நவம்பர் 14) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் அந்த மாவட்டத்தில் பெய்த மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதனை அகற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் உள்ள பள்ளிகளில் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மாங்காடு உள்பட குன்றத்தூர் தாலுகா பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதனால் அந்த பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 14) விடுமுறை என ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.