தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்று (நவ. 23) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பருவமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களாக மழை தாக்கம் குறைந்த நிலையில், புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனால் இன்று (நவ. 23) மற்றும் நாளை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ. 23) விடுமுறை விட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!