தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 04) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 04) பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 4) பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அது மட்டுமில்லாமல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.